உள்ளடக்கத்திற்குச் செல்க

circa 1446–1406 BC

The Wilderness Years

Forty years of wandering in the desert test Israel's faith and prepare a new generation to enter the promised land.

2,247 வசனங்கள் · 2 புத்தகங்கள் உள்ளடக்கப்பட்டன

இந்தக் காலத்தின் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. எண்ணாகமம் 2:22சுமார் கி.மு. 1490

    பென்யமீன் கோத்திரம் அதற்கு அடுத்ததாக இருக்கும். கீதெயோனின் மகன் அபீதான், பென்யமீன் மக்களுக்குத் தலைவன்.

  2. எண்ணாகமம் 2:23சுமார் கி.மு. 1490

    அவனுடைய பிரிவின் தொகை 35,400 பேர்.

  3. எண்ணாகமம் 2:24சுமார் கி.மு. 1490

    எப்பிராயீமின் பக்கத்திற்கு அவர்களுடைய பிரிவுகளின்படி நியமிக்கப்பட்ட எல்லா மனிதரும் 1,08,100 பேர். அவர்கள் மூன்றாவதாகப் புறப்படுவார்கள்.

  4. எண்ணாகமம் 2:25சுமார் கி.மு. 1490

    வடக்குப் பக்கத்தில் தாண் முகாமின் பிரிவுகள் தங்கள் சின்னத்தின்கீழ் இருக்கும். அம்மிஷதாயின் மகன் அகியேசேர், தாண் மக்களுக்குத் தலைவன்.

  5. எண்ணாகமம் 2:26சுமார் கி.மு. 1490

    அவனுடைய பிரிவின் தொகை 62,700 பேர்.

  6. எண்ணாகமம் 2:27சுமார் கி.மு. 1490

    ஆசேர் கோத்திரம் அவர்களை அடுத்ததாக முகாமிடவேண்டும். ஓகிரானின் மகன் பாகியேல், ஆசேர் மக்களுக்குத் தலைவன்.

  7. எண்ணாகமம் 2:28சுமார் கி.மு. 1490

    அவனுடைய பிரிவின் தொகை 41,500 பேர்.

  8. எண்ணாகமம் 2:29சுமார் கி.மு. 1490

    நப்தலி கோத்திரம் அடுத்ததாக இருக்கும். ஏனானின் மகன் அகீரா, நப்தலி மக்களுக்குத் தலைவன்.

  9. எண்ணாகமம் 2:30சுமார் கி.மு. 1490

    அவனுடைய பிரிவின் தொகை 53,400 பேர்.

  10. எண்ணாகமம் 2:31சுமார் கி.மு. 1490

    தாணின் பக்கத்திற்கு நியமிக்கப்பட்ட மனிதர்களின் மொத்தத்தொகை 1,57,600 பேர். அவர்கள் கடைசியாக தங்கள் கொடிகளின் கீழ் புறப்படுவார்கள்.

  11. எண்ணாகமம் 2:32சுமார் கி.மு. 1490

    அவரவருடைய குடும்பங்களின்படி கணக்கிடப்பட்ட இஸ்ரயேலர்கள் இவர்களே. அவர்களுடைய பிரிவுகளின்படி முகாம்களில் இருந்த எல்லோருடைய எண்ணிக்கை 6,03,550 பேர்.

  12. எண்ணாகமம் 2:33சுமார் கி.மு. 1490

    ஆனாலும், யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடி, லேவியர் மற்ற இஸ்ரயேலருடன் கணக்கிடப்படவில்லை.

  13. எண்ணாகமம் 2:34சுமார் கி.மு. 1490

    அப்படியே யெகோவா மோசேக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் இஸ்ரயேலர் செய்தார்கள். அந்த முறையாக அவர்கள் தங்கள் கொடிகளின் கீழே முகாமிட்டு இருந்தார்கள். அவ்விதமாகவே அவர்கள் போகும்போது ஒவ்வொருவரும் தன் வம்சத்துடனும், குடும்பத்துடனும் புறப்பட்டார்கள்.

  14. எண்ணாகமம் 3:1சுமார் கி.மு. 1490

    யெகோவா சீனாய் மலையின்மேல் மோசேயுடன் பேசிய காலத்திலிருந்த, ஆரோன் மோசே ஆகியோரின் குடும்ப வம்சவரலாறு:

  15. எண்ணாகமம் 3:2சுமார் கி.மு. 1490

    ஆரோனின் மகன்களின் பெயர்களாவன: மூத்த மகனான நாதாப், பின்பு அபியூ, எலெயாசார், இத்தாமார் ஆகியோர்.

  16. எண்ணாகமம் 3:3சுமார் கி.மு. 1490

    இவர்கள் எல்லோரும் ஆசாரியர்களாகப் பணிசெய்வதற்கு நியமிக்கப்பட்டு, அபிஷேகம் பண்ணப்பட்ட ஆரோனின் மகன்கள்.

  17. எண்ணாகமம் 3:4சுமார் கி.மு. 1490

    ஆனால் நாதாபும், அபியூவும் சீனாய் பாலைவனத்தில் யெகோவாவுக்கு முன்பாக அங்கீகரிக்கப்படாத நெருப்பினால், காணிக்கையைச் செலுத்தியபோது, அவருக்கு முன்னால் செத்து விழுந்தார்கள். அவர்களுக்கு மகன்கள் இல்லை. அதனால் எலெயாசாரும், இத்தாமாரும் மட்டுமே தங்கள் தந்தையான ஆரோனின் வாழ்நாட்களில் ஆசாரியர்களாகப் பணிசெய்து வந்தார்கள்.

  18. எண்ணாகமம் 3:5சுமார் கி.மு. 1490

    யெகோவா மோசேயிடம் சொன்னதாவது,

  19. எண்ணாகமம் 3:6சுமார் கி.மு. 1490

    “ஆசாரியன் ஆரோனுக்கு உதவிசெய்யும்படி லேவி கோத்திரத்தாரை அவனுக்கு முன் அழைத்து வா.

  20. எண்ணாகமம் 3:7சுமார் கி.மு. 1490

    அவர்கள் சபைக் கூடாரத்தில், இறைசமுகக் கூடாரத்தின் வேலைகளைச் செய்து, அவனுக்காகவும், முழு சமுதாயத்திற்காகவும் கடமைகளைச் செய்யவேண்டும்.

  21. எண்ணாகமம் 3:8சுமார் கி.மு. 1490

    அவர்கள் சபைக் கூடாரத்தின் பொருட்கள் எல்லாவற்றையும் பராமரித்து, இறைசமுகக் கூடாரத்தின் வேலைகளைச் செய்வதினால் இஸ்ரயேலின் கடமைகளையும் நிறைவேற்றவேண்டும்.

  22. எண்ணாகமம் 3:9சுமார் கி.மு. 1490

    ஆரோனுக்கும், அவன் மகன்களுக்கும் உதவியாக லேவியரைக் கொடுக்கவேண்டும். அவனுக்கு அர்ப்பணமாய்க் கொடுக்கப்படவேண்டிய இஸ்ரயேலர்கள் இவர்களே.

  23. எண்ணாகமம் 3:10சுமார் கி.மு. 1490

    ஆரோனையும், அவன் மகன்களையும் குருத்துவப் பணிசெய்யும்படி நியமிக்கவேண்டும். பரிசுத்த இடத்தை நெருங்கும் வேறு எவனும் கொல்லப்படவேண்டும்” என்றார்.

  24. எண்ணாகமம் 3:11சுமார் கி.மு. 1490

    மேலும் யெகோவா மோசேயிடம் சொன்னதாவது,

  25. எண்ணாகமம் 3:12சுமார் கி.மு. 1490

    “ஒவ்வொரு இஸ்ரயேல் பெண்களுக்கும் கர்ப்பந்திறந்து பிறக்கும் மூத்த ஆண்பிள்ளைக்குப் பதிலாக இஸ்ரயேலருக்குள் இருந்து நான் லேவியரைத் தெரிந்துகொண்டேன். இந்த லேவியர் எனக்குரியவர்கள்.