Skip to content

Creation Era

Creation & The Fall

God creates the heavens and earth, forming humanity in his image before sin enters the world.

138 வசனங்கள் · 1 புத்தகம் உள்ளடக்கப்பட்டது

இந்தக் காலத்தின் வசனங்கள்

  1. ஆதியாகமம் 4:21சுமார் கி.மு. 4003

    அவனுடைய சகோதரனின் பெயர் யூபால்; அவன் முதன்முதலில் வீணை, புல்லாங்குழல் ஆகிய இசைக்கருவிகளை இசைத்தவன் ஆனான்.

  2. ஆதியாகமம் 4:22சுமார் கி.மு. 4003

    சில்லாளும், தூபால்காயீன் என்னும் ஒரு மகனைப் பெற்றாள்; அவன் வெண்கலம், இரும்பு ஆகியவற்றால் கருவிகளைச் செய்யும் தொழிலாளி ஆனான். தூபால்காயீனுடைய சகோதரி நாமாள்.

  3. ஆதியாகமம் 4:23சுமார் கி.மு. 4003

    லாமேக் தன் இரு மனைவிகளிடம் சொன்னதாவது: “ஆதாளே, சில்லாளே, எனக்குச் செவிகொடுங்கள்; லாமேக்கின் மனைவிகளே, என் வார்த்தைகளைக் கேளுங்கள். என்னைக் காயப்படுத்தியபடியால் ஒரு மனிதனைக் கொன்றேன், எனக்குத் தீங்கு செய்தபடியாலேயே அந்த வாலிபனைக் கொன்றேன்.

  4. ஆதியாகமம் 4:24சுமார் கி.மு. 4003

    காயீனைக் கொல்பவனிடம் ஏழுமடங்கு பழிவாங்கப்படும் என்றால், லாமேக்கிற்காக எழுபத்தேழு மடங்கு பழிவாங்கப்படும்.”

  5. ஆதியாகமம் 4:25சுமார் கி.மு. 4003

    ஆதாம் மீண்டும் தன் மனைவியுடன் உறவுகொண்டான், அவள் ஒரு மகனைப் பெற்றாள், “காயீன் கொலைசெய்த ஆபேலுக்குப் பதிலாக இறைவன் வேறொரு பிள்ளையைக் கொடுத்தார்” என்று சொல்லி, அவனுக்கு சேத் என்று பெயரிட்டாள்.

  6. ஆதியாகமம் 4:26சுமார் கி.மு. 3769

    சேத்தும் ஒரு மகனைப் பெற்றான்; அவன் தன் மகனுக்கு ஏனோஸ் என்று பெயரிட்டான். அக்காலத்தில் மக்கள் யெகோவாவின் பெயரைக் கூப்பிட்டு அவரை ஆராதிக்க ஆரம்பித்தார்கள்.

  7. ஆதாமின் வம்சவரலாறு இதுவே: இறைவன் மனிதரைப் படைத்தபோது, அவனை இறைவனின் சாயலிலேயே உண்டாக்கினார்.

  8. அவர் அவர்களை ஆணும் பெண்ணுமாகப் படைத்து, அவர்களை ஆசீர்வதித்தார். அவர் அவர்களைப் படைத்தபோது அவர்களை, “மனிதர்” என்று அழைத்தார்.

  9. ஆதியாகமம் 5:3சுமார் கி.மு. 3874

    ஆதாம் 130 வருடங்கள் வாழ்ந்தபின், ஆதாமுக்கு தன்னுடைய சாயலிலும், தன்னுடைய உருவிலும் ஒரு மகன் பிறந்தான்; அவனுக்கு “சேத்” என்று பெயரிட்டான்.

  10. ஆதியாகமம் 5:4சுமார் கி.மு. 3874

    சேத் பிறந்தபின் ஆதாம் 800 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான்.

  11. ஆதியாகமம் 5:5சுமார் கி.மு. 3074

    ஆதாம் மொத்தம் 930 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான்.

  12. ஆதியாகமம் 5:6சுமார் கி.மு. 3769

    சேத் தனது 105 வயதில் ஏனோஸுக்குத் தகப்பனானான்.

  13. ஆதியாகமம் 5:7சுமார் கி.மு. 3769

    சேத் ஏனோஸைப் பெற்றபின் 807 வருடங்கள் வாழ்ந்து இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான்.

  14. ஆதியாகமம் 5:8சுமார் கி.மு. 2962

    சேத் மொத்தம் 912 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான்.

  15. ஆதியாகமம் 5:9சுமார் கி.மு. 3679

    ஏனோஸ் தனது 90 வயதில் கேனானுக்குத் தகப்பனானான்.

  16. ஆதியாகமம் 5:10சுமார் கி.மு. 3679

    கேனான் பிறந்த பிறகு ஏனோஸ் 815 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான்.

  17. ஆதியாகமம் 5:11சுமார் கி.மு. 2864

    ஏனோஸ் மொத்தம் 905 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான்.

  18. ஆதியாகமம் 5:12சுமார் கி.மு. 3609

    கேனான் தனது 70 வயதில் மகலாலெயேலுக்குத் தகப்பனானான்.

  19. ஆதியாகமம் 5:13சுமார் கி.மு. 3609

    மகலாலெயேல் பிறந்த பிறகு, கேனான் 840 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான்.

  20. ஆதியாகமம் 5:14சுமார் கி.மு. 2769

    கேனான் மொத்தம் 910 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான்.

  21. ஆதியாகமம் 5:15சுமார் கி.மு. 3544

    மகலாலெயேல் தனது 65 வயதில் யாரேத்திற்குத் தகப்பனானான்.

  22. ஆதியாகமம் 5:16சுமார் கி.மு. 3544

    யாரேத் பிறந்த பிறகு மகலாலெயேல் 830 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான்.

  23. ஆதியாகமம் 5:17சுமார் கி.மு. 2714

    மகலாலெயேல் மொத்தம் 895 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான்.

  24. ஆதியாகமம் 5:18சுமார் கி.மு. 3382

    யாரேத் தனது 162 வயதில் ஏனோக்குக்குத் தகப்பனானான்.

  25. ஆதியாகமம் 5:19சுமார் கி.மு. 3382

    ஏனோக்கு பிறந்த பிறகு யாரேத் 800 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான்.