Skip to content

Creation Era

The Tower of Babel

Scattered nations and confused languages mark the beginning of the diversity of peoples across the earth.

64 வசனங்கள் · 1 புத்தகம் உள்ளடக்கப்பட்டது

இந்தக் காலத்தின் வசனங்கள்

  1. பெருவெள்ளத்திற்கு பிறகு நோவாவின் மகன்களாகிய சேம், காம், யாப்பேத் என்பவர்களுக்கு, பிறந்த மகன்களின் வம்சவரலாறு.

  2. யாப்பேத்தின் மகன்கள்: கோமர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மேசேக்கு, தீராஸ்.

  3. கோமரின் மகன்கள்: அஸ்கினாஸ், ரீப்பாத்து, தொகர்மா.

  4. ஆதியாகமம் 10:4சுமார் கி.மு. 2338

    யாவானின் மகன்கள்: எலீஷா, தர்ஷீஸ், கித்தீம், தொதானீம்.

  5. ஆதியாகமம் 10:5சுமார் கி.மு. 2247

    இவர்களிலிருந்து கடற்கரை ஓரங்களில் வசிக்கும் மக்கள், தங்கள் வம்சங்களின்படியே, அவரவருக்குரிய சொந்த மொழிகளுடன், தங்கள் பிரதேசங்களுக்குள் பரவினார்கள்.

  6. ஆதியாகமம் 10:6சுமார் கி.மு. 2228

    காமின் மகன்கள்: கூஷ், மிஸ்ராயீம், பூத், கானான்.

  7. ஆதியாகமம் 10:7சுமார் கி.மு. 2228

    கூஷின் மகன்கள்: சேபா, ஆவிலா, சப்தா, ராமா, சப்திகா. ராமாவின் மகன்கள்: சேபா, திதான்.

  8. ஆதியாகமம் 10:8சுமார் கி.மு. 2289

    கூஷின் மகன் நிம்ரோத்; இவன் பூமியில் வலிமையுள்ள வீரனாக விளங்கினான்.

  9. ஆதியாகமம் 10:9சுமார் கி.மு. 2289

    அவன் யெகோவாவின் பார்வையில் மிகவும் வலிமைவாய்ந்த வேட்டைக்காரனாய் இருந்தான்; அதனால்தான், “யெகோவா முன்னிலையில் வலிமையுள்ள வேட்டைக்காரன் நிம்ரோதைப்போல்” என்ற வழக்கச்சொல் உண்டாயிற்று.

  10. ஆதியாகமம் 10:10சுமார் கி.மு. 2259

    சிநெயார் நாட்டிலுள்ள பாபேல், ஏரேக், அக்காத், கல்னே ஆகிய இடங்களே அவனுடைய அரசாட்சியின் முக்கிய இடங்களாயிருந்தன.

  11. ஆதியாகமம் 10:11சுமார் கி.மு. 2304

    அவன் அந்நாட்டிலிருந்து அசீரியாவுக்குப் போய், அங்கே நினிவே, ரெகொபோத் ஈர், காலாகு என்னும் பட்டணங்களைக் கட்டினான்.

  12. ஆதியாகமம் 10:12சுமார் கி.மு. 2304

    நினிவேக்கும், காலாகுக்கும் இடையில் ரெசேன் பட்டணத்தையும் கட்டினான்; இது பிரதான நகரம்.

  13. ஆதியாகமம் 10:13சுமார் கி.மு. 2304

    மிஸ்ராயீமின் சந்ததிகள்: லூதீமியர், ஆனாமியர், லெகாபியர், நப்தூகியர்,

  14. ஆதியாகமம் 10:14சுமார் கி.மு. 2304

    பத்ரூசீயர், பெலிஸ்தியரின் சந்ததிக்கு தலைவனான கஸ்லூகியர், கப்தோரியர்.

  15. ஆதியாகமம் 10:15சுமார் கி.மு. 2304

    கானானின் சந்ததிகள்: மூத்த மகன் சீதோன், கேத்து,

  16. ஆதியாகமம் 10:16சுமார் கி.மு. 2304

    எபூசியர், எமோரியர், கிர்காசியர்,

  17. ஆதியாகமம் 10:17சுமார் கி.மு. 2304

    ஏவியர், அர்கீயர், சீனியர்,

  18. ஆதியாகமம் 10:18சுமார் கி.மு. 2304

    அர்வாதியர், செமாரியர், காமாத்தியர். பின்பு கானானிய வம்சத்தினர் பல இடங்களிலும் குடியேறினர்.

  19. ஆதியாகமம் 10:19சுமார் கி.மு. 2304

    கானானியரின் எல்லை சீதோன் முதல் கேரார் வழியாகக் காசாவரைக்கும், பின்பு சோதோம், கொமோரா, அத்மா, செபோயீம் வழியாக லாசாவரைக்கும் பரந்திருந்தது.

  20. ஆதியாகமம் 10:20சுமார் கி.மு. 2304

    அவரவர் வம்சங்களின்படியும், மொழிகளின்படியும், தங்கள் நாடுகளுக்குள்ளும் எல்லைகளுக்குள்ளும் குடியிருந்த காமின் மகன்கள் இவர்களே.

  21. ஆதியாகமம் 10:21சுமார் கி.மு. 2304

    சேமுக்கு மகன்கள் பிறந்தார்கள், அவனுடைய மூத்த சகோதரன் யாப்பேத்; சேம் ஏபேரின் மகன்கள் எல்லாருக்கும் முற்பிதாவாய் இருந்தான்.

  22. ஆதியாகமம் 10:22சுமார் கி.மு. 2304

    சேமின் மகன்கள்: ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம்.

  23. ஆதியாகமம் 10:23சுமார் கி.மு. 2304

    ஆராமின் மகன்கள்: ஊத்ஸ், கூல், கேத்தெர், மாஸ்.

  24. ஆதியாகமம் 10:24சுமார் கி.மு. 2304

    அர்பக்சாத் சேலாவின் தகப்பன், சேலா ஏபேரின் தகப்பன்.

  25. ஆதியாகமம் 10:25சுமார் கி.மு. 2247

    ஏபேருக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள். ஒருவன் பெயர் பேலேகு, ஏனெனில், அவன் காலத்தில் பூமியிலுள்ள மக்கள் வெவ்வேறு மொழி குழுக்களாக பிரிக்கப்பட்டனர்; அவனுடைய சகோதரன் பெயர் யொக்தான்.