- English
- King James KJV
- Complete Jewish CJB
- World English WEBM
- Berean Standard BSB
- American Standard ASV
- Geneva GNV
- Young's Literal YLT
- Douay-Rheims DRC
- International
- Shqip ALB
- العربية SVD
- বাংলা BN-IRV
- မြန်မာ Judson
- 简体文 CUV-S
- 繁體中文 CUV-T
- Čeština BKR
- Nederlands STVE
- Français LSG
- Deutsch SCH
- Ελληνικά Vamvas
- ગુજરાતી GU-IRV
- Hausa HCB
- עברית Hebrew
- हिन्दी HCV
- Magyar KAROLI
- Bahasa Indonesia INDO-TB
- Italiano Diodati
- 日本語 Kougo
- 한국어 Korean
- മലയാളം MAL
- मराठी MRCV
- Norsk DNB
- فارسی OPV
- Polski BG
- Português Almeida
- Română Cornilescu
- Русский Synodal
- Español RVG
- Kiswahili Neno
- Svenska SV1917
- Tagalog TAG-ADB
- தமிழ் TCV
- తెలుగు TSA
- ภาษาไทย THAI-KJV
- Українська Ohienko
- Tiếng Việt CADMAN
- Yorùbá YCB
நெகேமியா7
Listen to this chapter
0:00
0:00
நிர்வாகமும் பாதுகாப்பும் ஏற்படுத்தப்படுகின்றன
1
மதில் திரும்பவும் கட்டப்பட்டு முடிந்ததும், நான் கதவுகளை அதற்குரிய இடத்தில் வைத்தேன். வாசல் காவலர்களும், பாடகர்களும் லேவியர்களும் நியமிக்கப்பட்டார்கள்.
2
எருசலேமுக்குப் பொறுப்பாக அரண்மனையின் தளபதி ஆளுநனான அனனியாவுடன் என் சகோதரன் ஆனானியை வைத்தேன். ஏனெனில் அனனியா அங்கிருந்த அநேகரைக் காட்டிலும் உத்தமமுள்ளவனும், இறைவனுக்குப் பயந்து நடக்கிறவனுமாயிருந்தான்.
3
நான் அவர்களிடம், “பகலில் வெயில் ஏறும்வரை எருசலேமின் நுழைவாசல் கதவுகள் திறக்கப்படக் கூடாது. வாசல் காவலர் கடமையில் இருக்கும்போதே அவர்களைக்கொண்டு கதவுகள் பூட்டப்பட்டு, தாழ்ப்பாள்களை போடுங்கள். அத்துடன் எருசலேமின் குடியிருப்பாளர்களிலிருந்தே காவலர் தெரிந்தெடுக்கப்பட வேண்டும். அவர்களில் சிலரை காவல் நிலையங்களிலும், மற்றும் சிலரை அவர்களின் வீட்டின் அருகேயும் காவலுக்கு ஏற்படுத்துங்கள்” என்றும் சொன்னேன்.
4
இப்பொழுது பட்டணம் பெரியதும், விசாலமானதுமாக இருந்தது. ஆனால் இருந்த மக்கள் தொகை மிகவும் குறைவாயிருந்தது. வீடுகளும் திரும்பக் கட்டப்படவில்லை.
முதலில் திரும்பிவந்தவர்களின் பதிவேட்டை நெகேமியா கண்டுபிடிக்கிறான்
5
அப்பொழுது இறைவன் உயர்குடி மனிதரையும், அதிகாரிகளையும், சாதாரண மக்களையும் ஒன்றுகூட்டி, அவர்களை அவரவர் குடும்பங்களின்படி பதிவு செய்வதற்காக என் மனதை ஏவினார். முதலில் திரும்பி வந்தவர்களின் வம்ச அட்டவணை ஒன்று எனக்குக் கிடைத்தது. அதில் எழுதப்பட்டிருந்தது இதுவே:
திரும்பிவந்தவர்களின் பதிவேடு
6
பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சாரால் சிறைபிடிக்கப்பட்டு, நாடுகடத்தப்பட்டவர்களுள், சிறையிருப்பிலிருந்து, அவர்களுடைய பட்டணமான எருசலேமுக்கும், யூதாவுக்கும்
7
செருபாபேல், யெசுவா, நெகேமியா, அசரியா, ராமியா, நகமானி, மொர்தெகாய், பில்சான், மிஸ்பெரேத், பிக்வாய், நெகூம், பானா என்பவர்களுடன் திரும்பி வந்தார்கள். இவர்களுடன் திரும்பி வந்த இஸ்ரயேல் மனிதரின் பெயர் பட்டியல்:
8
பாரோஷின் சந்ததி 2,172 பேர்,
9
செபத்தியாவின் சந்ததி 372 பேர்,
10
ஆராகின் சந்ததி 652 பேர்,
11
யெசுவா, யோவாப்பின் வழிவந்த பாகாத் மோவாபின் சந்ததி 2,818 பேர்,
12
ஏலாமின் சந்ததி 1,254 பேர்,
13
சத்தூவின் சந்ததி 845 பேர்,
14
சக்காயின் சந்ததி 760 பேர்,
15
பின்னூயியின் சந்ததி 648 பேர்,
16
பெபாயின் சந்ததி 628 பேர்,
17
அஸ்காதின் சந்ததி 2,322 பேர்,
18
அதோனிகாமின் சந்ததி 667 பேர்,
19
பிக்வாயின் சந்ததி 2,067 பேர்,
20
ஆதீனின் சந்ததி 655 பேர்,
21
எசேக்கியாவின் வழிவந்த ஆதேரின் சந்ததி 98 பேர்,
22
ஆசூமின் சந்ததி 328 பேர்,
23
பேஸாயின் சந்ததி 324 பேர்,
24
ஆரீப்பின் சந்ததி 112 பேர்,
25
கிபியோனின் சந்ததி 95 பேர்.
26
பெத்லெகேமையும் நெத்தோபாவையும் சேர்ந்த மனிதர் 188 பேர்,
27
ஆனதோத்தின் மனிதர் 128 பேர்,
28
பெத் அஸ்மாவேத்தின் மனிதர் 42 பேர்,
29
கீரியாத்யாரீம், கெபிரா, பேரோத் பட்டணங்களின் மனிதர் 743 பேர்,
30
ராமா, கேபாவின் மனிதர் 621 பேர்,
31
மிக்மாஸின் மனிதர் 122 பேர்,
32
பெத்தேல், ஆயியின் மனிதர் 123 பேர்,
33
மற்ற நேபோவின் மனிதர் 52 பேர்,
34
மற்ற ஏலாமின் மனிதர் 1,254 பேர்,
35
ஆரீமின் மனிதர் 320 பேர்,
36
எரிகோவின் மனிதர் 345 பேர்,
37
லோத், ஆதித், ஓனோ பட்டணங்களின் மனிதர் 721 பேர்,
38
செனாகாவின் மனிதர் 3,930 பேர்.
ஆசாரியர்கள், லேவியர்கள், ஆலயப் பணியாளர்கள்
39
ஆசாரியர்கள்: யெசுவாவின் குடும்பத்தானாகிய யெதாயாவின் சந்ததி 973 பேர்,
40
இம்மேரின் சந்ததி 1,052 பேர்,
41
பஸ்கூரின் சந்ததி 1,247 பேர்,
42
ஆரீமின் சந்ததி 1,017 பேர்.
43
லேவியர்கள்: ஒதாயாவின் வழியே கத்மியேலின் வழிவந்த யெசுவாவின் சந்ததி 74 பேர்.
44
பாடகர்கள்: ஆசாப்பின் சந்ததி 148 பேர்.
45
வாசல் காவலர்கள்: சல்லூம், அதேர், தல்மோன், அக்கூப், அதிதா, சோபாய் ஆகியோரின் சந்ததி 138 பேர்.
46
ஆலய பணியாட்கள்: சீகா, அசுபா, தபாயோத்,
47
கேரோசு, சீயா, பாதோன்,
48
லெபானா, அகாபா, சல்மாயி,
49
ஆனான், கித்தேல், காகார்,
50
ரயாயா, ரேசீன், நெக்கோதா,
51
காசாம், ஊசா, பாசெயா,
52
பேசாய், மெயூனீம், நெபுசீம்,
53
பக்பூக், அகுபா, அர்கூர்,
54
பஸ்லுத், மெகிதா, அர்ஷா,
55
பர்கோஸ், சிசெரா, தேமா,
56
நெத்சியா, அதிபா ஆகியோரின் சந்ததிகள்.
57
சாலொமோனின் வேலையாட்களின் சந்ததிகள்: சோதாய், சொபெரேத், பெரிதா,
58
யாலா, தர்கோன், கித்தேல்,
59
செபத்தியா, அத்தீல், பொகெரேத் செபாயீம், ஆமோன் ஆகியோரின் சந்ததிகள்.
60
ஆலய பணியாட்களுடன், சாலொமோனின் பணியாட்களின் சந்ததிகளும் சேர்த்து 392 பேர்.
வம்ச உரிமை சர்ச்சைக்குரியவர்கள்
61
பின்வருவோர் தெல்மெலா, தெல்அர்ஷா, கேரூப், ஆதோன், இம்மேர் ஆகிய நகரங்களிலிருந்து திரும்பி வந்தவர்கள். ஆனால் அவர்களுக்கோ தங்கள் குடும்பங்கள் இஸ்ரயேலின் வழிவந்தவை என நிரூபிக்க முடியவில்லை.
62
அவர்கள்: தெலாயா, தொபியா, நெக்கோதா ஆகியோரின் சந்ததிகளான 642 பேர்.
63
ஆசாரியர்களைச் சேர்ந்தவர்கள்: அபாயா, அக்கோசு, பர்சில்லாய் ஆகியோரின் சந்ததிகள். பர்சிலாய் என்பவன் கீலேயாத்திய மனிதனான பர்சிலாயின் மகள்களில் ஒருத்தியைத் திருமணம் செய்ததால் இப்பெயரால் அழைக்கப்பட்டான்.
64
இவர்கள் தங்கள் குடும்ப அட்டவணையைத் தேடினார்கள்; ஆனால் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் அவர்கள் ஆசாரியப் பணியிலிருந்து அசுத்தமானவர்கள் எனத் தள்ளி வைக்கப்பட்டார்கள்.
65
ஊரீம், தும்மீம் அணிந்த ஒரு ஆசாரியன் எழும்பும் வரைக்கும் அவர்கள் மகா பரிசுத்த உணவிலிருந்து எதையும் சாப்பிடக்கூடாது என ஆளுநன் உத்தரவிட்டான்.
மக்கள்தொகையும் செல்வமும் பற்றிய சுருக்கம்
66
எண்ணப்பட்ட முழுத் தொகை 42,360 பேர்.
67
இவர்களைத் தவிர அவர்களின் ஆண் பெண் வேலைக்காரர் 7,337 பேரும், பாடகர்களும் பாடகிகளும் 245 பேரும் இருந்தனர்.
68
மேலும் 736 குதிரைகளும், 245 கோவேறு கழுதைகளும்,
69
435 ஒட்டகங்களும், 6,720 கழுதைகளும் இருந்தன.
70
குடும்பத் தலைவர்களில் சிலர் வேலைக்கு நன்கொடைகளைக் கொடுத்தார்கள். ஆளுநர் 1,000 தங்கக் காசுகளையும், 50 பாத்திரங்களையும், 530 ஆசாரிய உடைகளையும் கருவூலத்திற்குக் கொடுத்தான்.
71
சில குடும்பங்களின் தலைவர்கள் ஆலய வேலையின் கருவூலத்திற்கு 20,000 தங்கக் காசுகளையும், 2,200 மினா வெள்ளியையும் கொடுத்தார்கள்.
72
மற்ற மக்கள் 20,000 தங்கக் காசுகளையும், 2,000 மினா வெள்ளியையும், ஆசாரியருக்கான 67 உடைகளையும் கொடுத்தார்கள்.
நகரங்களில் குடியேறுதல்
73
ஆசாரியர்கள், லேவியர்கள், பாடகர்கள், வாசல் காவலர்கள், ஆலய பணியாளர்கள் ஆகியோர் மக்களில் குறிப்பிட்ட சிலருடனும், மீதியான இஸ்ரயேலருடனும் சேர்ந்து, தங்கள் சொந்தப் பட்டணங்களில் குடியேறினார்கள். ஏழாம் மாதம் இஸ்ரயேலர் வந்து தங்கள் ஊர்களில் குடியேறியபோது,
Use ← → arrow keys to navigate
Settings
Reading Style
Typeface
Font Size px
Reading Width chars
Options
Study Note