Skip to content
1 நாளாகமம் 2:3-15

1 நாளாகமம் 2:3-15

3
யூதாவின் மகன்கள்: ஏர், ஓனான், சேலா என்பவர்கள்; இந்த மூவரும் சூவாவின் மகளான கானானிய பெண்ணின் மகன்கள். யூதாவின் மூத்த மகன் ஏர் என்பவன் யெகோவாவின் பார்வையில் கொடுமையானவனாய் இருந்தான். அதனால் யெகோவா அவனைக் கொன்றுபோட்டார்.
4
யூதாவின் மருமகள் தாமார் என்பவள் யூதாவுக்கு பேரேஸ், சேரா என்பவர்களைப் பெற்றாள். யூதாவிற்கு மொத்தம் ஐந்து மகன்கள் இருந்தார்கள்.
5
பேரேஸின் மகன்கள்: எஸ்ரோன், ஆமூல்.
6
சேராவின் மகன்கள்: சிம்ரி, ஏத்தான், ஏமான், கல்கோல், தாரா என்னும் ஐந்துபேர்.
7
கர்மீயின் மகன்: ஆகார், இவன் யெகோவாவுக்கென விலக்கப்பட்ட பொருட்களை எடுத்ததால், இஸ்ரயேலுக்குக் கேட்டை உண்டுபண்ணினான்.
8
ஏத்தானின் மகன்: அசரியா.
9
எஸ்ரோனின் மகன்கள்: யெராமியேல், ராம், காலேப்.
10
ராம் அம்மினதாபின் தகப்பன், அம்மினதாப் யூதா மக்களுக்குத் தலைவனாக இருந்த நகசோனின் தகப்பன்.
11
நகசோன் சல்மாவின் தகப்பன், சல்மா போவாஸின் தகப்பன்,
12
போவாஸ் ஓபேத்தின் தகப்பன், ஓபேத் ஈசாயின் தகப்பன்.
13
ஈசாய்க்குப் பிறந்தவர்கள்: மூத்த மகன் எலியாப், இரண்டாவது மகன் அபினதாப், மூன்றாவது மகன் சிமெயா,
14
நான்காவது மகன் நெதனெயேல், ஐந்தாவது மகன் ரதாயி,
15
ஆறாவது மகன் ஓத்சேம், ஏழாவது மகன் தாவீது.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options