Skip to content
ஆதியாகமம் 35:27-29

ஈசாக்கின் இறப்பும் அடக்கமும்

ஆதியாகமம் 35:27-29
27
யாக்கோபு கீரியாத் அர்பாவுக்கு அருகேயிருந்த எப்ரோன் எனப்படும் மம்ரேயில் வசித்த தன் தகப்பன் ஈசாக்கின் வீட்டுக்குத் திரும்பிவந்தான். ஆபிரகாமும் ஈசாக்கும் முன்பு அவ்விடத்திலேயே குடியிருந்தனர்.
28
ஈசாக்கு நூற்று எண்பது வருடங்கள் உயிரோடிருந்தான்.
29
பின்பு ஈசாக்கு தன் இறுதி மூச்சைவிட்டு இறந்தான்; பூரண ஆயுள் உள்ளவனாய் தன் முன்னோருடன் சேர்க்கப்பட்டான். அவனுடைய மகன்களான ஏசாவும், யாக்கோபும் அவனை அடக்கம்பண்ணினார்கள்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options