Skip to content
எண்ணாகமம் 1:5-19

எண்ணாகமம் 1:5-19

5
“உனக்கு உதவியாய் இருக்கவேண்டியவர்களின் பெயர்களாவன: “ரூபன் கோத்திரத்திலிருந்து சேதேயூரின் மகன் எலிசூர்;
6
சிமியோன் கோத்திரத்திலிருந்து சூரிஷதாயின் மகன் செலூமியேல்,
7
யூதா கோத்திரத்திலிருந்து அம்மினதாபின் மகன் நகசோன்,
8
இசக்கார் கோத்திரத்திலிருந்து சூவாரின் மகன் நெதனெயேல்,
9
செபுலோன் கோத்திரத்திலிருந்து ஏலோனின் மகன் எலியாப்,
10
யோசேப்பின் மகன்களான எப்பிராயீமின் கோத்திரத்திலிருந்து அம்மியூதின் மகன் எலிஷாமா, மனாசே கோத்திரத்திலிருந்து பெதாசூரின் மகன் கமாலியேல்,
11
பென்யமீன் கோத்திரத்திலிருந்து கீதியோனியின் மகன் அபீதான்,
12
தாண் கோத்திரத்திலிருந்து அம்மிஷதாயின் மகன் அகியேசேர்,
13
ஆசேர் கோத்திரத்திலிருந்து ஓகிரானின் மகன் பாகியேல்,
14
காத் கோத்திரத்திலிருந்து தேகுயேலின் மகன் எலியாசாப்,
15
நப்தலி கோத்திரத்திலிருந்து ஏனானின் மகன் அகீரா.”
16
தங்களுடைய முற்பிதாக்களின் கோத்திரங்களின் தலைவர்களாக, இஸ்ரயேல் சமுதாயத்திலிருந்து நியமிக்கப்பட்ட மனிதர்கள் இவர்களே. இஸ்ரயேல் வம்சங்களின் தலைவர்களும் இவர்களே.
17
மோசேயும், ஆரோனும் பெயர் கொடுக்கப்பட்ட இம்மனிதரைச் சேர்த்துக்கொண்டார்கள்.
18
இரண்டாம் மாதம் முதலாம் நாளில், இஸ்ரயேலின் முழு சமுதாயத்தையும் ஒன்றுகூட்டினார்கள். மக்கள் தங்கள் பரம்பரையைத் தங்கள் வம்சங்களின்படியும், குடும்பங்களின்படியும் குறிப்பிட்டார்கள். இருபது வயதையும், அதற்கு மேற்பட்ட வயதையும் உடைய மனிதர்கள் ஒவ்வொருவரும், பெயர் பெயராகப் பதிவு செய்யப்பட்டார்கள்.
19
யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே அவர்கள் செய்தார்கள். இப்படியாக சீனாய் பாலைவனத்தில் அவன் அவர்களைக் கணக்கிட்டான்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options