கடைசி ஆறு கட்டளைகள்: பிறருக்கான கடமை
யாத்திராகமம் 20:12-17
12
உன் தகப்பனையும் தாயையும் கனம்பண்ணு. அப்பொழுது உன் இறைவனாகிய யெகோவா உனக்குக் கொடுக்கும் நாட்டிலே நீ நீடித்து வாழ்வாய்.
13
கொலைசெய்ய வேண்டாம்.
14
விபசாரம் செய்யவேண்டாம்.
15
களவு செய்யவேண்டாம்.
16
உன் அயலானுக்கு எதிராகப் பொய்ச்சாட்சி சொல்லாதே.
17
உன் அயலானுடைய வீட்டை அபகரிக்க ஆசைகொள்ளாதே. உன் அயலானின் மனைவியையோ, அவனுடைய வேலைக்காரனையோ, வேலைக்காரியையோ, அவனுடைய எருதையோ, கழுதையையோ, அவனுக்குரிய எதையும் அபகரிக்க ஆசைகொள்ளாதே.”
Settings