1 தெசலோனிக்கேயர் 5:16-22
16
எப்பொழுதும் மகிழ்ச்சியாய் இருங்கள்.
17
இடைவிடாது மன்றாடுங்கள்.
18
எல்லாவித சூழ்நிலையிலும் நன்றி செலுத்துங்கள்; இதுவே கிறிஸ்து இயேசுவில் உங்களுக்கான இறைவனின் சித்தம்.
19
ஆவியானவரின் அனலை அணைத்துப் போடாதிருங்கள்.
20
சொல்லப்படுகின்ற இறைவாக்கை அலட்சியம் செய்யவேண்டாம்.
21
எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து, நல்லதைப் பற்றிக்கொள்ளுங்கள்.
22
எல்லா விதமான தீயசெயல்களையும் விட்டு விலகியிருங்கள்.
Settings